மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பெட்டகத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.