Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
இசைப்பள்ளி சேர்க்கை – 2026 29/05/2026 31/05/2026 பார்க்க (19 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2026-ம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு

2026-2027-ஆம் கல்வியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட எனும் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

27/05/2026 03/06/2026 பார்க்க (208 KB)
கனிமம் மற்றும் சுரங்கத்துறை செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாயிலுள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்ல மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

25/05/2026 31/05/2026 பார்க்க (393 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச் செய்திகள் 25/05/2026 31/05/2026 பார்க்க (27 KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (ர்டுழு) ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்களால் சுய கணக்கெடுப்பு பதிவு செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

22/05/2026 31/05/2026 பார்க்க (19 KB)
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
1) விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2) இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3) ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4) கல்வி உதவித்தொகை 5) திருமண உதவித்தொகை 6) மகப்பேறு உதவித்தொகை 7) மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் 8) முதியோர் ஓய்வூதியம்.
மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3)அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில்இ நிலமற்ற விவசாய கூலி;இ உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல்இ நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி கீழ்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். றறற.னnஉறடி.வn.பழஎ.in மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்;.

22/05/2026 31/05/2026 பார்க்க (354 KB)
இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கால் மற்றும் இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதல் விவரங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

19/05/2026 31/05/2026 பார்க்க (18 KB)
மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கான தகுதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை வெளிசந்தை முறையில் முகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.50,000-ல் நிரப்பிட உள்ளது.

19/05/2026 31/05/2026 பார்க்க (22 KB)
உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும்;, அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

19/05/2026 31/05/2026 பார்க்க (72 KB)
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 11/05/2026 09/07/2026 பார்க்க (66 KB)
கால்நடைத்துறை – செய்தி

கோடைகாலத்தில் அதிகரித்துள்ள வெயில் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

12/05/2026 31/05/2026 பார்க்க (30 KB)
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின்; சிறார்களுக்கு 2026-27 ஆம் ஆண்டில், முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்த படிவத்துடன், ஓய்வூதிய ஆணை நகல், படைவிலகல் சான்றில் மாணவர் ஃ மாணவி பெயர் இல்லாத நிலையில் அதற்கான நகல், மாணவர் மாணவி ஆதார் அட்டை நகல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்று கோரும் மாணாக்கர்களுடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வருமாறும், அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆவணங்களை என்ற அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது (04365-299765) என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

11/05/2026 31/05/2026 பார்க்க (19 KB)
கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதி முழுவதிலும் (திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

15/04/2026 14/06/2026 பார்க்க (188 KB)
2009 – ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை  மாவட்டத்தில் 2009 – ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

28/03/2026 26/09/2026 பார்க்க (79 KB)
ஆவணகம்