கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. | தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதி முழுவதிலும் (திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. |
15/04/2026 | 14/06/2026 | பார்க்க (188 KB) |